ஓணம் பண்டிகையையொட்டி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்து ஒரு கிலோ மல்லிகை பூ 2 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோல, பிச்சி, கனகாம்பரம் பூக்கள் விலை கிலோ ஆயிரம் ரூபாய்க்கும், சம்பங்கி 400 ரூபாய்க்கும், ரோஜா 260 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.பண்டிகை தினம் என்பதால் விலையையும் பொருட்படுத்தாமல் மக்கள் பூக்களை வாங்க குவிந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.