Also Watch
Read this
By: Web Team

ஆந்திர மாநிலத்தில் கனமழை தொடர்வதால் கோதாவரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி ஒன்றிய ஆட்சி பகுதிக்கு உட்பட்ட ஏனாமில் கடற்கரை மற்றும் ஆற்றுப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கோதாவரி ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் உள்ள ஏனாம் பகுதியில் பாலயோகி பாலத்தின் வழியே கடலை நோக்கி வெள்ளம் செல்கிறது.