மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நாகை மாவட்ட வேளாங்கண்ணியில் தவெகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்கரைப்பேட்டை, செருதூர், வெள்ளப்பள்ளம் மீனவர்கள் மீது கடற் கொள்ளையர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 23 பேர் காயமடைந்ததனர். இதனைக் கண்டித்து தவெகவினர் வேளாங்கண்ணி ஆர்ச் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்துக்கு சென்ற போலீசாருடன் தவெகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.