சிவகங்கை மாவட்டம் செம்பூர் அருகே எரிபொருள் டேங்கர்கள் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிவகங்கை - மதுரை சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து எதிர்திசையில், கேஸ் மற்றும் டீசல் ஏற்றி வந்த இரண்டு டேங்கர் லாரிகளின் மீது மோதியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தீ விபத்து ஏற்பட்டுவிடாத வகையில் தீத்தடுப்பு பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். காயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.