சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே, கத்திரி வெயிலின் தாக்கத்தால் கண்மாயில் தீவிபத்து ஏற்பட்டது. மேலநெட்டூர் கிராமத்தில் உள்ள கண்மாயில் கோடை வெயிலில் கருவேல மரங்களும், புற்களும் காய்ந்து காணப்பட்ட நிலையில், கருவேல மரம் ஒன்று பற்றி எரிந்தது. காற்றின் வேகத்தில் தீ வேகமாக பரவி, காய்ந்திருந்த புற்களிலும் பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்த நிலையில், பனை ஓலைகளை பயன்படுத்தி புற்களில் எரிந்த தீயை அணைத்தனர்.