ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே எரிந்து கொண்டிருந்த குப்பையில் இருந்து பரவிய தீயால் இருசக்கர வாகனம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. பச்சமலை பகுதியை சேர்ந்த சுமித்ரா என்பவர் தனது வீட்டின் குப்பைகளை கொட்டுவதற்காக தனது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் அவற்றை எடுத்து சென்றுள்ளார். அப்போது, கருக்கம்பாளி சாலையோரத்தில் எரிந்து கொண்டிருந்த குப்பை மீது, அவர் கொண்டு வந்த குப்பைகளை வீசியபோது அதிலிருந்து பற்றிய தீ அவரது இருசக்கர வாகனத்தில் எடுத்துவரப்பட்ட குப்பை பையில் பற்றி மளமளவென பரவியது . உடனடியாக சுதாரித்து ஸ்கூட்டரில் இருந்து இறங்கிய சுமித்ரா உயிர் தப்பினார்.