கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அமையாகரம் கிராமத்தின் எல்லையில் இயங்கி வரும் சாம்பிராணி கம்பெனியில் 100க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அப்போது, தீ மளமளவென பரவிய நிலையில் குடோன் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.