வடகிழக்கு பருவமழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். மேலும் சில இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை, சம்பா நெற் பயிர்கள் மழையில் சாய்ந்து சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.