தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே விலை வீழ்ச்சி காரணமாக விரக்தியடைந்த விவசாயிகள் காலிபிளவர் செடிகளை டிராக்டர்களை கொண்டு அழித்தனர். திருமலாபுரம், கரிசல்பட்டி, கண்டமனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலிபிளவர் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. வரத்து அதிரித்தும் ஒரு கிலோ காலிபிளவர் 10 ரூபாயிக்கு கூட விற்பனையாகதால் நஷ்டமடைந்த விவசாயிகள் செடிகளை டிராக்டர்களை கொண்டு அழித்தனர். மேலும் விலை வீழ்ச்சி காரணமாக காலிபிளவர்களை பறிக்க வேலை ஆட்களுக்கு கூலி கொடுக்க கூட முடியாத நிலையில் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள காலிபிளவர்களை செடிகளில் இருந்து பறிக்காமல் அப்படியே விட்டு விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். எதிர்காலத்தில் விவசாயத்தை காக்கும் வகையில் அனைத்து விலை பொருட்களும் நிலையான விலையை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.