திருப்பத்தூர் பகுதியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தற்போது அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஒரு கிலோ தக்காளி எட்டு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை மட்டுமே விற்பனையாவதால் கூலிக்கு கூட கட்டுபடியாகவில்லை என வேதனை தெரிவித்த விவசாயிகள் அரசு தக்காளிக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யவும், தக்காளியை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வதற்கான ஆலோசனைகளை வழங்கவும் கோரிக்கை விடுத்தனர்.