மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே முன்னாள் அமைச்சருக்கு சிலை அமைக்கப்போவதாக கூறி விவசாய நிலத்தை திமுக முன்னாள் எம்எல்ஏ பி.கல்யாணம், ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக விவசாயி பாஷ்யம் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.