சென்னை பெரம்பூரில் சீனிவாசா சிலம்பாட்டம் குழு மற்றும் அகத்தியர் சிலம்பாட்ட குழு சார்பில் மாபெரும் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பொங்கல் வைத்து கொண்டாடினர். தொடர்ந்து சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.