சென்னை மதுரவாயலில் உள்ள எம்ஜிஆர் பல்கலைகழகத்தில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்தும், நடனமாடியும் தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். இதையடுத்து பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.