கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனப்பகுதியில் உடல்நிலை பாதிக்கப்பட்ட காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஆண் யானை ஒன்று சோர்வுடன் இருந்ததை கண்டறிந்த வனத்துறையினர் உடலில் காயங்கள் இல்லாததால், கல்லீரல் அல்லது சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறி சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் 5 நாட்களாக இருந்த இடத்தில் இருந்து நகராமல் இருந்த யானை உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.