திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, நன்னிலம் உள்ளிட்ட இடங்களில் மணிக்கணக்கில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மின் இணைப்பு துண்டிப்பு குறித்து புகார் அளிக்க தொலைப்பேசியில் தொடர்பு கொண்டால், அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளிப்பதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.