Also Watch
Read this
Posted on: Feb 12, 2026 09:16 AM
By: Fyrose Banu

பல்லடம் பேருந்து நிலையம் முன்பாக மத்திய அரசு தொழிலாளர் நலத்துறை சட்டங்களை திருத்தக் கூடாது என்று கூறி கண்டனம் செய்து கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
கூட்டத்தில் உதவி கேட்ட மூதாட்டி
அப்போது 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர் தொடர்ந்து சாலையோரத்தில் மூதாட்டி ஒருவர் குனிந்தபடி பணப்பாளையம் வரை செல்ல வேண்டும் என்று அங்கிருந்து அவர்களிடம் உதவி கேட்டார்.
எங்கு செல்ல வேண்டும் பாட்டி?
அப்போது அவர் டிஎஸ்பி என்று தெரியாமலேயே தனக்கு உதவும்படி அந்த மூதாட்டி கேட்டபோது, எங்கு செல்ல வேண்டும் பாட்டி என்று கூறி 200 ரூபாயை எடுத்துக் கொடுத்து ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தார்.
மூதாட்டிக்கு ரூ.200 கொடுத்து உதவிய DSP
DSP பார்த்திபன் யாரும் எதிர்பாராத நேரத்தில் உதவி செய்த இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved