அரியலூர் மாவட்டம், இடையக்குறிச்சி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மகாபாரத திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், விரதமிருந்த பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து தேரோட்டத்திலும் திரளானோர் பங்கேற்றனர்.