காஞ்சிபுரம் குமரக்கோட்டத்தில் வைர வேலுடன் வெள்ளித் தேரில் எழுந்தருளிய முருகப் பெருமானை திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி, குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுக்கு 2 முறை மட்டுமே நடைபெறும் நிகழ்வான வைர வேலுடன் முருகப் பெருமான் வள்ளி - தெய்வானை சமேதராக வெள்ளித் தேரில் எழுந்தருள, அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.