வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலையில், ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி உற்சவர் சண்முகர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய நிலையில், பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் கிரிவலம் சென்றனர்.