வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய பாஜக அரசை கண்டித்தும் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு பின்னர், பேரணாம்பட்டு பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.