தீபாவளி போனஸ் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நேரத்தில் மாத ஊதியம் வழங்க வேண்டும், தொழிலாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழக்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், துப்புரவு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.