கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்தது. பாப்பாத்திமூலை, புளியங்கோட்டை, மோட்டார்பட்டி, வஞ்சிகுழி உள்ளிட்ட கிராமங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அங்கு பயிரிடப்பட்டிருந்த 500 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்தது. சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.