புதுச்சேரியில் ஓசியில் மது கொடுக்காத ஆத்திரத்தில் ஆந்திர மாநில தொழிலாளியை இளைஞர் கத்தியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டு வரும் சார்ஜிங் ஸ்டேசனில் பணிபுரிந்து வரும் ஆந்திர தொழிலாளர்கள் மது அருந்தி கொண்டிருந்தபோது, ஓசியில் இளைஞர் மது கேட்டார். அப்போது அவர் கொடுக்காத ஆத்திரத்தில் தொழிலாளி ரவணையா-வை இளைஞர் சரமாரியாக வெட்டினார்.