மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் வழிபாடு மட்டுமல்லாது பொங்கல் வைக்கவும் அனுமதி கோரி, பட்டியல் சமூகத்தினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டியல் சமூக மக்கள் வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால், கடந்த 10 ஆண்டுகளாக கோவில் திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்த சூழலில், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்பேரில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.