வேலூர் மாநகராட்சியை சேர்ந்த இரு கவுன்சிலர்கள் பொது இடத்தில் தகாத வார்த்தைகளை பேசி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். திமுக கவுன்சிலர்களான கணேஷ் சங்கர் வேலூர் மாநகராட்சியில் 25 வது வார்டு கவுன்சிலராகவும், சதீஷ் 27-வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளனர். இந்நிலையில் சதீஷ், சங்கர் கணேஷ் தன்னை பற்றி தொடர்ந்து அவதூறு பரப்புவதாகவும், கட்சி மேலிடத்துக்கு தவறான தகவல்களை அளித்து வருவதாகவும் தெரிவத்தார்.