தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 15 படுக்கை வசதியுடன், ஸ்வேப் டெஸ்ட், கொரோனா உடை அறை உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.