சிவகங்கையில் ஆசிரியைகளிடம் சர்ச்சையாக பேசிய அதிகாரியை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிவகங்கை புனித ஜஸ்டின் பள்ளியில் 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்காக சென்றிருந்த 300 பேருக்கு பணி ஆணை வழங்காமல் நாள் முழுவதும் காத்திருக்க வைத்துள்ளனர். மாலையில் பணி விடுவிப்பு செய்யும்போது, துணை அதிகாரி முத்துப்பாண்டி சர்ச்சையாக பேசியதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.