மயிலாடுதுறை அருகே கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள விடாமல் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து தாக்கியதாக மூதாட்டி ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலவேலி கிராமத்தை சேர்ந்த கமலவாணி என்பவர், அவரது வீட்டிற்கு அருகில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் நடைபெற்ற திருப்பணியின் போது, வீட்டிற்கு அருகில் பள்ளம் தோண்ட அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. தற்போது கோயில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், தீமிதி உற்சவத்தில் மூதாட்டியை பங்கேற்க விடாமல் தடுத்து, தீபாராதனை எடுக்க சென்ற அவரை சிலர் தாக்கியதாக தெரிகிறது.