கள்ளக்குறிச்சி மாவட்டம் ராயப்பனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் 60 லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்ததாக புகார் எழுந்துள்ளது. புகாரைத் தொடர்ந்து, அதிகாரிகள் தணிக்கை செய்தபோது 60 லட்சம் ரூபாய் வரை மாயமானது தெரியவந்த நிலையில், தணிக்கை செய்ய விடாமல் தடுத்து அதிகாரிகளிடம் செயலாளர் துரைசாமியின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.