சக்தி பீடத் தலங்களில் முதன்மைத் தலமாக விளங்கும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றும் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்களை எழுப்பி, காஞ்சி காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர்.