விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சேதுராயனேந்தல் கிராமத்தில் பிரசவத்திற்காக ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு பாதி வழியிலேயே ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு பிரசவம் பார்த்த அவசரகால மருத்துவ உதவியாளர் விஜயலட்சுமி மற்றும் ஆம்புலன்ஸை ஓட்டி சென்ற சின்னவெள்ளைக்கு கிராமத்தினர் பாராட்டுகளை தெரிவித்தனர்.