கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அரசு பேருந்து மீது பைக் நேருக்கு நேர் மோதியதன் சிசிடிவி காட்சி வெளியாகியது. ஆசாரிப்பள்ளம் சாலையில் சென்ற கார் ஓட்டுநர், இண்டிகேட்டரை எரியவிட்டபடி வலது பக்கமாக திருப்பியபோது, அந்த வழியாக அதிவேகமாக பைக்கை ஓட்டி சென்ற நபர், காரை முந்தி சென்று எதிரே வந்த பேருந்தின் மீது மோதினார். இதில்,பைக்கில் சென்ற இருவரும் படுகாயம் அடைந்தனர்.