நீலகிரி மாவட்டம் நடுவட்டம் காவல் நிலையத்தில் சிறுத்தை புகுந்து உலா வரும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சிறுத்தை செல்லும் வரை காவல் நிலையத்தில் மறைந்திருந்த காவலர் கதவை மூடி கொண்டு தற்காத்து கொண்டார். காவலர்கள் இரவு நேர பணிக்காக சென்றதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.