நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகளவு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெரியார் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் சிறுத்தை உலா வந்துள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.