ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவரை, இளைஞர் எட்டி உதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செட்டித்தாங்கலை சேர்ந்த விஜயலட்சுமி என்பவருக்கும் அங்குள்ள இளைஞர் ஒருவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.