சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் திமுக சொந்தம் கொண்டாட முடியாது என பொங்கி எழுந்த அன்புமணி ராமதாஸ், திமுகவுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்? என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை கோவிலம்பாக்கத்தில் மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதாக மத்திய அரசு அறிவித்தது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என பெருமிதம் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் பின் தங்கிய மக்களின் நிலை குறித்த உண்மையான விவரத்தை அறிந்து கொள்ள தமிழக அரசு Caste Survey எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.