கன்னியாகுமரி மாவட்டம் குருக்கல் மடத்தில், வெளிநாட்டில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்டு பிடிபட்ட தங்க நகையை குறைந்த விலைக்கு தருவதாக கூறி, ஆட்டோ ஓட்டுநரிடம் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தக்கலையை சேர்ந்த பிராங்ளின் என்பவர் ஆட்டோ ஓட்டுநர் ராஜூவிடம் நட்பாக பழகி பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.