நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு கொடுத்தது எப்படி என விளக்கம் அளிக்கும்படி தாம்பரம் மாநகராட்சி ஆணையர் மற்றும் மின்சார வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட நன்மங்கலம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை அகற்ற உத்தரவிடக் கோரி ராமச்சந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கை தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி மோகன் அமர்வு விசாரித்தது. ஆக்கிரமிப்புகள் இருப்பதை ஒப்புக் கொள்ளும் அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை எடுக்காததில் இருந்து, அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களுடன் கைகோர்த்து செயல்படுவதாக தோன்றுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.