கோவை மாவட்டம் வால்பாறையில் சாலையில் நின்றிருந்த சுற்றுலா பயணிகள் மீது மோதும் வகையில் சென்ற கார் ஓட்டுநரால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சுற்றுலா பயணிகள் திரண்டு கார் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கூட்டத்தை கலைத்ததுடன், ஓட்டுநருக்கும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.