தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 19 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், திமுக கவுன்சிலர் உட்பட 11 பேரை கைது செய்தனர். நீல்புரத்தை சேர்ந்த நவீன் என்பவரின் காரும், திருச்செந்தூர் கோகுல் நகரை சேர்ந்த கண்ணன் என்பவரின் இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்டன. இது தொடர்பாக, நவீன் தந்தை கல்கண்டு ஜெபராஜை கண்ணன் தரப்பினர் தாக்கியதால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது குறித்து, 19 பேர் மீது வழக்கு பதிவு செய்த தாலுகா போலீஸார், திருச்செந்தூர் நகராட்சி 4-ஆவது வார்டு திமுக கவுன்சிலர் தினேஷ் கிருஷ்ணா உட்பட 11 பேரை கைது செய்தனர்.