தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் திமுக, அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, மோதல் சம்பவம் நடந்த இடத்தில் அமைச்சர் பெரிய கருப்பன் இல்லை என வாதிடப்பட்டது.