தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பழமை வாய்ந்த அழகுநாச்சியம்மன் கோயிலில் தூக்கு தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. நாகரசம்பேட்டையில் உள்ள அழகுநாச்சயம்மன் கோயில் திருவிழாவையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளி அருள்பாலித்தார்.இதனை தொடர்ந்து,சுமார் 5 டன் எடையிலான தேரை 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக 8 கிலோ மீட்டர் தூரம் வரை தோளில் வைத்து தூக்கி சென்று வழிபட்டனர்.