திருவாரூரில் வாடிக்கையாளரின் தனிப்பட்ட தகவல்களை சட்டவிரோதமாக பகிர்ந்த புகாரில் Bank of Baroda வங்கிக்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. மன்னார்குடியில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள குமார் சிபில் ஸ்கோர் குறைந்து தொடர்பாக ஆராய்ந்தார். அதில் வேறோருவர் வாங்கிய கடனுக்கு, குமார் ஜாமீன் வழங்கியதாகவும், அந்த கடனை அவர் சரியாக திருப்பிச் செலுத்ததால் குமாரின் சிபில் ஸ்கோர் குறைந்தது தெரியவந்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான குமார், தனிப்பட்ட தகவல்களை சட்டவிரோதமாக வங்கி பகிர்ந்ததாக கூறி திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார்.