மதுரையில் ரயில் பயணிகளிடம் திருடியதாக, இளைஞர் ஒருவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டத்தை சேர்ந்த நாகராஜ் என்ற அந்த திருடன், 2021- ம் ஆண்டு முதல் ரயில் பயணிகளிடம் இருந்து லேப்டாப், செல்போன், பணம் உள்ளிட்ட பொருட்களை திருடி வந்துள்ளான். கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தவனை மதுரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.