கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கிராம நிர்வாக அலுவலரை அலுவலகத்தில் உள்ளே பூட்டிய விவகாரத்தில் உதவியாளர் சங்கீதாவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் நேரத்தில் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், கிராம நிர்வாக அலுவலர் தமிழரசியை அலுவலகத்தில் உள்ளே வைத்து பூட்டி விட்டு சங்கீதா சென்றார்.