கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் அருகே கருவின் பாலினத்தை அறிவித்த மருந்துக் கடைகாரரை போலீசார் கைது செய்தனர். மேல்மக்கான் எதிரே செயல்பட்டு வரும் மருந்து கடையில் கருவின் பாலினத்தை கண்டறிந்து கூறுவதாக வந்த தகவலின் பேரில் சுகாதாரப் பணி அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்தனர். அப்போது கடையில் இருந்த இருவர் தப்பியோடிய நிலையில், கடை நடத்தி வரும் பாலமுரளியை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டதையடுத்து அவரை கைது செய்த அதிகாரிகள் ஸ்கேன் இயந்திரம், மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர்.