நெல்லை மாவட்டம் செட்டிகுளத்தில் நடைபெற்ற கல்குவாரி கருத்து கேட்பு கூட்டத்தில் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருக்கன்துறை பகுதியில் புதிதாக கல்குவாரி அமைப்பதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் செட்டிகுளம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கனிம விதியை மீறி பல ஆவணங்கள் மறைக்கபட்டு இருப்பதால் கல்குவாரிக்கு அனுமதி வழங்க கூடாது என்று எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டினர். அப்போது அவர்களுடன் கல்குவாரி ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர்.