Also Watch
Read this
By: Web Team

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த ஜலகண்டாபுரம் பேரூராட்சியில் தனிநபரின் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஜலகண்டாபுரம் பேரூராட்சியின் 8ஆவது வார்டில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடந்து வரும் நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதில் பாரபட்சமாக தனிநபர் ஆக்கிரமித்து கட்டிய வணிக வளாகத்தை மட்டும் அகற்றவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி முற்றுகையிட்டனர். இது குறித்து புகார் தெரிவித்தால் அதிகாரிகள் மிரட்டுவதாகவும் மக்கள் குற்றம்சாட்டினர்.