சேலம் மாவட்டத்தில் ஆதி திராவிடர் மாணவ விடுதிகளில் பணியாற்றிய 80 சமையலர் பணியிடங்களுக்கு புதிதாக நியமனம் மேற்கொள்ளும்படி தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சமையலர் பணியிடம் தொடர்பாக தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சமையலர்கள் ராணி, கலா உள்ளிட்ட 5பேர் மேல் முறையீடு செய்திருந்தனர்.