Also Watch
Read this
By: Web Team

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 71 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பரிசு பொருட்கள் மற்றும் பணம் லஞ்சமாக பெறுவதாக எழுந்த புகாரின் பேரில் சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.